சென்னை அண்ணா நகரில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீட்டை நான்கு வாரங்களில் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை நீதிமன்றம் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.