ஓபிஎஸ் அணி சார்பில் நமது புரட்சித் தொண்டன்” புதிய நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ் அணியின் நிர்வாகி புகழேந்தி, அண்ணன் பண்ருட்டியார் அவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்  அவர்களோடு வாழ்ந்தவர், அவரை நீண்ட நேரம் சொல்லி சொல்லிக் கொண்டே போக வேண்டிய அவசியம் இல்லை. ஒரே வரியில் சொல்லிடுவேன் அண்ணன பத்தி  நானு…  தலைவர் பல சினிமாக்களில் கதாநாயகியை  கட்டிப்புடிச்சு  பார்த்திருக்கோம்..

ராஜ்குமார் என்ற நடிகருக்கு முத்தம் கொடுப்பார்…  ராமாராவுக்கு முத்தம் கொடுப்பாரு…  ஆனால் அதற்கு மேலாக ஒருவருக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்தியிருந்தால் ?  அதுதான் எங்கள் தலைவர் பண்ருட்டியார் என்பதை இங்கே சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

அவர் கையாலே இந்த ”புரட்சி தொண்டன்” நாளிதழை தொடங்கி வைத்தார்கள்.  நடிகன், மன்ற முரசு, தென்னகம், குத்தூசி, விடுதலை, திராவிட அணி, அண்ணா, தாய், வார பத்திரிக்கை, ஹோம் லேண்ட் …. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த பத்திரிக்கை வரிசையிலே தான் இன்றைய தினம் இங்கே ”புரட்சித் தொண்டன்” . ஒன்றை சொல்வதற்கு தான் நான் ஆசைப்பட்டேன்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு “காலத்தை வென்றவன் காவியமான வேதனை தீர்த்தவர் விழிகளில் நிறைந்தவர் வெற்றி திருமகன்” என்று புலமைப்பித்தன் அண்ணன் எழுதினார். கவிஞர்கள் வாலி, கவிஞர் கண்ணதாசன் இவர்கள் வழியிலே இன்றைய தினம் நாம் பார்க்கின்ற ஒரு பெரிய கவிஞராக… 

அம்மாவே அழைத்து என் அன்பு சகோதரர் மருது அழகுராஜை  உங்கள் வரி மிகவும் வலிமையாக இருக்கிறது. மருது அழகுராஜ்  என்று போடாதீர்கள்…   நீங்கள் பேரை மாற்றி சித்திர குப்தன் என்று போட்டு எழுதுங்கள் என்று சொன்னார்கள். அப்பொழுது மருது அழகுராஜுக்கு சித்திரகுப்தன் அம்மா பேரு வச்சது சொன்னாங்க. அதுக்கு பின்னால இப்போ.. ஓய்வு இல்லாமல் எழுதிக் கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.