மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் சென்ற வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதுகுறித்த விவாத கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட DMK கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக ஆர்பாட்டம் செய்தனர். மாமன்ற குழு தலைவராக 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன் கடந்த 2022 டிசம்பர் 29 அன்று நியமிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ஆர்பாட்டம் நடந்தது.

குழு தலைவருக்கு தனி அறை ஒதுக்க வேண்டும், மாமன்ற கூட்ட தீர்மானங்கள் பற்றி விவாதிப்பதற்கான அறை, மற்ற மாநகராட்சிகளிலுள்ள குழு தலைவர்களுக்கு அளிக்கப்படும் பிரதிநிதித்துவம் போன்றவை அளிக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.