அ.தி.மு.க-வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சேலத்தில் நேற்று மாலை அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக-பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள தேசிய தலைவர்களே தவிர்த்து மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல. அதிமுக கூட்டணியில் பாஜக குறித்து டெல்லி தலைவர்களே கூறிவிட்டனர்.

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வருமென எதிர்பார்க்கிறோம். அதிமுகவிலிருந்து வெளியேறியவர்களில் சில பேரை தவிர்த்து மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்திலிருந்து இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவரின் ஜனநாயக உரிமை என அவர் தெரிவித்தார்.