அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி அண்மையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி அதிமுக பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். அதிமுக பொது குழு தீர்மானம் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீடு விசாரணை நடைபெற்ற வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பிலிருந்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மனு கொடுத்துள்ளார்.

அதில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாலும் அதிமுக பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் கூறி எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இபிஎஸ்க்கு ஓபிஎஸ் போட்ட முட்டுக்கட்டை என பார்க்கப்படுகிறது.