இந்திய பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னைக்கு வருகை புரிகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற ஏப்ரல் 8-ம் தேதி தமிழகத்திற்கு வருகை புரிகிறார். பிரதமர் மோடி ஏப்ரல் 8-ம் தேதி சென்னை கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் முனையத்தை தொடங்கி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து தாம்பரம் செங்கல்பட்டு இடையே வாரத்தில் 3 நாள் இயக்கப்படும் விரைவு ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.