காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்தும், தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து சட்ட விரோதமாக கூடுதல், சென்னை காவல் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசை கண்டித்து வருகிற 15 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் அதானி விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்து தொடர்ந்து போராடுவோம் என கூறிய அவர், ஏப்ரல் 20-ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.