தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கியது. கடந்த 3-ம் தேதியோடு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்வுத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடத்தில் 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கணித தேர்வில் கேள்வி எண் 47(b)-க்கு விடை எழுத முயற்சி செய்திருந்தால் அந்த மாணவர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.