நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் விடுமுறை காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்களிலும், சுற்றுலா வாகனங்களிலும் ஊட்டிக்கு வந்தனர்.

இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக உதகை-கோத்தகிரி தேசிய நெடுஞ்சாலை, உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை, படகு இல்லம், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.