ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டையில் இருக்கும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தினமும் யாகங்கள், அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. தன்வந்திரி பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பிடாதிபதி யக்னஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதர ஸ்வாமிகளின் 63-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தினமும் அபிஷேக, ஆராதனைகள், பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அதன் முக்கிய நிகழ்ச்சியாக 1000 பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொள்ளும் நாட்டிய மஹோத்சவம் நிகழ்ச்சி நாளை காலை முதல் மாலை வரை நடைபெறுகிறது. வருகிற 5-ஆம் தேதி பைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 64 பைரவர் யாகமும் அஷ்டகால மகா பைரவருக்கு 1000 கிலோ விபூதி அபிஷேகமும் நடைபெற உள்ளது. நாட்டிய மஹோத்சவம் மற்றும் பைரவர் ஜெயந்தி விழாவிற்கு ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.