கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து போன்ற பகுதிகளில் கடும் பனிப்பொழிவு, கனமழை போன்றவை நிலவி வருகின்றது. இதனால் இங்கிலாந்து நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது “இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு மட்டும் மஞ்சள் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

\இந்த உறைய வைக்கும் சீதோஸ்சனம் காரணமாக பல மில்லியன் இங்கிலாந்து நாட்டவர்கள் பாதிக்கப்படலாம். மேலும் இந்த பனிப்பொழிவால் விமான சேவை மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்படலாம். அதுமட்டுமல்லாமல் இந்த மோசமான வானிலையானது வரும் திங்கள்கிழமை வரை நீடிக்கலாம்” என கூறப்பட்டுள்ளது.