மெய்தி சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்க உத்தரவிட்டிருந்தார் மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி முரளிதரன். மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி முரளிதரன் வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் கட்டணம் தெரிவித்திருந்தது.

மார்ச் மாதம் 27ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி முரளிதரன் சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியிருந்தார். மெய்தி சமுதாய மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்கின்ற அந்த தீர்ப்பு காரணமாக குக்கி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. போராட்டங்கள் வெடித்தன. அது தொடர்ந்து படிப்படியாக வன்முறையாக மாறி, தற்போது அந்த மாநிலத்திலே இப்போது வரை சகஜ நிலை திரும்பவில்லை. அத்தகைய சூழ்நிலை நிரப்புகிறது.

மணிப்பூர் வன்முறைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு முக்கிய காரணமாக இந்த தீர்ப்பு கருதப்படுகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட்டே, இந்த தீர்ப்பு தவறானது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த தீர்ப்பை மாற்றிக்கொள்ள நீதிபதி முரளிதரனுக்கு வாய்ப்பு இருந்தும் கூட அவர் அந்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை என உச்ச நீதிமன்றம் அவரை கடுமையாக கண்டனம் செய்திருந்தது.

இத்தகைய சூழ்நிலையைத்தான் சர்ச்சைக்குரிய மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி முரளிதரன் தற்போது கல்கத்தாவுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார். அவரை பணியிடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலுஜியம் பரிந்துரை அளித்திருக்கிறது. விரைவிலேயே மத்திய அரசு இதற்கான உத்தரவுகளை குடியரசுத் தலைவர் அலுவலகம் மூலமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.