ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பந்தி என்ற மாவட்டத்தில் ரமேஷ் வைராகி என்பவர் தன் மகன் பவன் என்பவருக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்தார். இதையடுத்து ரமேஷ்  தன் மருமகள் மீது அதிக பாசம் வைத்திருந்ததாகவும், அவருடன் அடிக்கடி அன்பாக பேசியதாகவும் தெரிகிறது.  இந்நிலையில் பவன் மனைவிக்கு அண்மையில் குழந்தை பிறந்த நிலையில், திடீரென்று அவர் 6 மாத குழந்தையை விட்டுவிட்டு மாமனார் ரமேஷ் வைராகியுடன் வீட்டை விட்டு ஓடி விட்டார்.
இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பவன் தற்போது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தன்னிடம் பொய் கூறிவிட்டு தன் தந்தை ரமேஷுடன் மனைவி சென்று விட்டதாக பவன் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.