அசாம் மாநிலத்தில் உள்ள கௌகாத்தியில் கஹிலிபர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் அல்கேஷ் கோஸ்வாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய 5 மாத மகனின் கை கால்களை முறித்து கொடுமைப்படுத்தியுள்ளார். தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் பிறந்து 5 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையின் இரு கைகளையும் முறித்து ஒரு காலையும் உடைத்துள்ளார். தொடர்ந்து குழந்தை இரண்டு நாட்களாக அழுது கொண்டே இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டது.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் இரு கைகளும் ஒரு காலும் முறிந்து இருப்பதாக கூறியுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அல்கேஷிடம் விசாரித்ததில் அவர் தன் குழந்தையின் கை கால்களை முறித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இவரை தற்போது காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குழந்தையின் கை கால்களை எதற்காக முறித்தார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை. மேலும் பச்சிளம் குழந்தையை ஈவு இரக்கம் பாராமல் பெற்ற தந்தையே கை கால்களை முறித்து கொடுமைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.