டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் தன் டுவிட் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவற்றில் “இரவு நேரத்தில் டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது கார் ஓட்டுநர் ஒருவர் மது போதையில் என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.

இதையடுத்து நான் அவரை பிடித்தபோது, கார் கண்ணாடியில் என் கையைப் பூட்டி என்னை இழுத்துச்சென்றார். எனினும் கடவுள் உயிரை காப்பாற்றினார். டெல்லியில் மகளிர் ஆணைய தலைவி பாதுகாப்பாக இல்லையெனில், நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்” என வேதனையுடன் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஹரிஷ் சந்திரா என்ற அந்த டிரைவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.