மதுரை மாநாட்டில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  மதுரை மண் ராசியான மண்.  இந்த மண்ணிலே எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும். அப்படி ராசியான மாவட்டத்துல…   மதுரைல இந்த மாநாடு நடக்கு. முதல் முதலாக நான் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை இந்த மண்ணிலே தொடங்கி இருக்கின்றோம்.

நம்மை ஆளாக்கிய பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு புகழ் செய்கின்ற விதமாக 30.6.2017 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டது இந்த மதுரை மண்ணிலே தான்.

இந்த மதுரை மண்ணில் துவங்கப்பட்ட அத்தனையும் வெற்றி, வெற்றி, வெற்றி தான். தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களிலே பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை உங்களின் துணைவோடு, தலைமை கழக நிர்வாகிகள்… அப்போது அமைச்சர் பெருமக்களாக பல பேர் இருந்தார்கள்…. அவர்களோடு  பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி காட்டினோம் என தெரிவித்தார்.