செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், நம்முடைய வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாட்டிலே…  நம்முடைய கழகத்தின்  நிரந்தர பொதுச்செயலாளர், சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்திருக்கின்ற…  எளிய முதல்வராக இலக்கணம் படைத்திட்ட வருங்கால முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் தலைமையிலே நடைபெறுகின்ற இந்த வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான ஆயத்தை ஏற்பாடுகளை அண்ணன் எடப்பாடி அவர்களின் அறிவுரையின் பேரில்…

கழக மூத்த அமைச்சர்கள் –  முன்னாள் அமைச்சர்கள் – தலைமை கழக நிர்வாகிகள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதில் நம்முடைய மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், நம்முடைய கலகத்தின் அமைப்புச் செயலாளர்,  புதுக்கோட்டை மாவட்டத்தை கழகத்தின் எக்கு கோட்டையாக வழிநடத்திக் கொண்டிருக்கின்ற…

மாணவர் அணி காலத்தில் இருந்து தொண்டர் படையை வழிநடத்தி,  பயிற்சி கொடுத்து..  அதிலேயே புரட்சித்தலைவர் அம்மாவிடத்தில் பாராட்டைப் பெற்று…  இன்றைக்கு கழகத்தினுடைய பொதுச் செயலாளராக அண்ணன் எடப்பாடி அவர்களின் மனதிலே உழைப்பால்,  தன்னுடைய விசுவாசத்தால்,  முதலிடத்தை –  முன்னுரிமையான இடத்தை பிடித்து…

தன்னுடைய உழைப்பால் தொண்டர்களுடைய அன்பை பெற்று இருக்கக்கூடிய..   மதிப்புக்கும்,  மரியாதைக்கும் உரிய  டாக்டர் விஜயபாஸ்கர் அவர்கள் நேரிலே வருகை தந்து,  கழக புரட்சி தலைவி…  அம்மா பேரவையின் இந்த ராணுவ அணிவகுப்பினுடைய பயிற்சியை…  அறிவுரை வழங்கி துவங்கி வைத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.