திருச்சி மாவட்டத்தில் உள்ள நெய்குப்பை காமராஜர் காலனியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேம் குமார்(23) என்ற மகன் இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக பிரேம்குமாரும் அதே பகுதியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரியான ஆர்த்தி(23) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி வயலூரில் இருக்கும் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு சமயபுரம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதனால் போலீசார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆர்த்தியை பிரேம் குமாருடன் அனுப்பி வைத்தனர்.