விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாலப்பாடி கிராமத்தில் களத்தம்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. அதன் அருகிலேயே ஆரம்ப பள்ளி மற்றும் முருகர் கோவில் ஆகியவை இருக்கிறது. இந்நிலையில் மது குடித்துவிட்டு போதை தலைக்கேறியதும் சிலர் அந்த வழியாக செல்லும் மாணவிகள் மற்றும் பெண்களிடம் தகராறு செய்கின்றனர்.

இதனால் அந்த பக்கம் செல்வதற்கே பெண்கள் அச்சமடைந்தனர். நேற்று அந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊர் முக்கியஸ்தர்கள் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.