
கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் ஜித்தன் என்ற வாலிபர் வசித்து வருகின்றார். இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். ஆகவே அவர் தங்கும் விடுதியில் தங்கி வருகின்றார். அதுபோல கேரளாவை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இதில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் காதலி ஜித்தனுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சித்தன் தனது தங்கும் விடுதி அது அறையிலிருந்து காதலிக்கு செல்போனில் வீடியோ அழைப்பில் பேசியுள்ளார்.
அப்போது தன்னுடன் பேசாமல் இருப்பது பற்றி கேட்ட நிலையில் இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து காதலி வீடியோ அழைப்பில் இருந்த போது திடீரென்று ஜித்தன் மது பாட்டிலை உடைத்து தனது கை நரம்பை அறுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காதலி சாமர்த்தியமாக செயல்பட்டு ஜித்தன் தங்கியுள்ள தங்கும் அறை விடுதி அவரது செல்போன் என் ஆகியவற்றை கொடுத்து அவர் தற்கொலைக்கு முயன்றது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜித்தனை அருகிலுள்ள மருத்துவமனைக்கும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் ஜித்தன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.