தமிழ் திரையுலகின் முன்னணி டைரக்டராக வலம் வருபவர் இயக்குனர் மிஷ்கின். இவர் இப்போது இயக்குனராக மட்டுமல்லாமல் பல்வேறு படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். அந்த அடிப்படையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் மற்றும் தளபதி விஜய்யின் லியோ படத்தில் மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் மிஷ்கின். சமீபத்தில் லியோ சூட்டிங்கை நிறைவு செய்த மிஷ்கின் தன் சமூகவலைதளப்பக்கத்தில் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யை பாராட்டி மிஷ்கின் பகிர்ந்திருக்கும் தகவல் ஷோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. அதாவது, லியோ சூட்டிங் தளத்தில் படப்பிடிப்பின்போது இருவரும் மோதிக்கொள்ளும் பயங்கரமான சண்டை காட்சிகள் நடந்தது. அப்போது அந்த சூட்டிங் முடிந்தவுடன் உடனே தளபதி விஜய் என்னிடம் வந்து ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என கேட்டு பாசத்துடன் என்னை கட்டி அணைத்துக்கொண்டார். அதில் ஒரு பாசம் தெரிந்தது. அவர் ஒரு உண்மையான ஹீரோதான் என அந்த பேட்டியில் பாராட்டியுள்ளார் மிஷ்கின்.