தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருகின்றார் ரஜினிகாந்த். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சென்ற 2006ம் வருடம் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சென்று வருடம் இருவரும் பிரிவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தனர். இந்த நிலையில் பிரபல ஆர்ஜே ஷா ரஜினி-தனுஷ் இடையிலான உறவு குறித்து பேட்டி அளித்து இருக்கின்றார்.

அவர் கூறியுள்ளதாவது, வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தை தனுஷ் இயக்குவதை பார்த்து ரஜினி சூப்பரா இயக்கி இருக்கீங்க என பாராட்டு தெரிவித்தாராம். அப்போது தனுஷ் ரஜினியை இயக்க வேண்டும் என முதலிடம் கேட்டிருக்கின்றார். இதனால் தனுஷ் பா‌ பாண்டி திரைப்படத்தை முதலில் ரஜினிக்காக எழுதினாராம். பின் கதையை ரஜினியிடம் கூறி இருக்கின்றார். ஆனால் ரஜினி அந்த கதையில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். உங்க பேனரில் ஒரு படம் நடித்துக் கொடுக்கிறேன் என தெரிவித்திருக்கின்றார் ரஜினி.

இதன்பின் தனுஷின் அசுரன் திரைப்படம் உருவானதும் ரஜினியிடம் போட்டு காண்பித்துள்ளார்கள். இதை பார்த்த ரஜினி இன்டர்வெல் ப்ளாக்கில் எழுந்து நின்று இது பாஷா.. நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் என கைதட்டி குதித்தாராம். ரஜினி தனுஷ் இடையே மாமனார்-மருமகன் உறவை தாண்டி இருவரும் நல்ல நண்பர்கள். ரஜினிக்கு தனுஷின் உழைப்பு மற்றும் திறமையின் மீது மரியாதை இருந்திருக்கின்றது என தெரிவித்துள்ளார்.