திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 5- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வடலூர் ராமலிங்க அடிகளாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து மது கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மது கடைகளை திறந்து வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.