தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கனூர் பகுதியில் விஜயபாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மைக் செட் தொழிலாளி ஆவார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று விஜய் பாண்டியன் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது குழம்பு ருசியாக இல்லை எனக் கூறி விஜயபாண்டியன் தனது மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வெளியே சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.