விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கொத்தனூர் கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனக்கு சொந்தமான பசுமாட்டை மேச்சலுக்கு ஓட்டி சென்று மாலை நேரத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

இதனால் மின்னல் தாக்கி ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராஜேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.