திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாணிகுளம் பகுதியில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடையில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்நிலையில் தனியாக வசித்த தனபால் வாழ்க்கையை வெறுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தனபாலின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.