தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தளவாய்பாளையத்தில் செந்தில் வேலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சகோதரர் ரவிச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குருங்களூர் வெண்ணாற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருண், வினோத் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள் செந்தில் வேலன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்வேலன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.