முக்கியமான கோயில்களில் கர்ப்பிணி, பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விரைவாக தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் கோயில்களில் விரைவாக தரிசனம் செய்ய தனி வரிசை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் 12 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.