பாஜக உடனான கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்ய வேண்டியதாகும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ஈரோடு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டபோது இரட்டை இலை சின்னம் கிடைத்ததை மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்.

எவ்வளவோ இடர்ப்பாடுகளுக்கு இடையில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுக வலிமையுடனும், சிறப்புடனும் மக்களை நேசிக்கிற இயக்கமாக இருக்கும். அதிமுக தனது கொள்கையில் தெளிவாக உள்ளது. சிறுபான்மையினரை காக்கும் இயக்கமாக அதிமுக இருந்து வருகிறது.