சென்னையில் இருந்து மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு நேரடி விமான சேவைக்கான சாத்திய கூறுகள் உள்ளதா என்பதை ஆராயுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். மேலும் சென்னையில் இருந்து பினாங்குக்கு நேரடி விமான சேவையை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.