சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் 7,575 பேருக்கு நலத்திட்ட உதவிகளை எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். அதனை தொடர்ந்து அவர் பேசியதாவது, ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் ஆவார்கள்.

அவர்கள் இரண்டு பேரும் உருவாக்கிய இந்த கட்சியை எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று அவர் கூறினார். மேலும் அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட முதல்வராகலாம். ஆனால் திமுகவில் அப்படி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.