பாஜக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா,  எல்லாமே பொய்,  பிராடு சீட்ஸ். எவனாவது யோக்கியமானவன்.  நேர்மையானவன் இருக்கானா ? ஒரு பயலும் இல்லை. அந்த மாதிரி நடந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில்..  நீங்க பாருங்க,  நம்ம மாண்புமிகு முதலமைச்சர்.  அவரோட தங்கச்சியை உள்ள தூக்கி வச்சாங்களா? திகார்ல கழி தின்னுச்சா அந்த அம்மா.

சகோதரி எனக்கு… சகோதரி கனிமொழி. ஆனால் அப்பொழுது துடிக்காத ஸ்டாலின்,  இப்ப துடிக்கிறதுக்கு என்ன காரணம் ? கனிமொழி மாட்டிக்கிட்டா…  அவங்க எஜமான் போட்ட கேஸ். அப்போ சர்க்கார்ல மன்மோகன் சிங் பிரைம் மினிஸ்டர்.  ஆ.ராசா மினிஸ்டரா இருந்து  ஜெயிலுக்கு போனதும் ராஜினாமா பண்ணுனாரு.

அதனால் இப்போ செந்தில் பாலாஜி ராஜினாமா பண்ணனும்னா… உன் ஆ. ராசாவுக்கு நடந்தது இங்கு நடக்கணும்னு சொல்லுறோம். இப்ப துடிக்கிறார் ஸ்டாலின் ஏன் தெரியுமா ? முதல்வரின் குடும்பம் முழுவதும் சார் செல்லும் செந்தில் பாலாஜி வாய் திறந்தால்….  அதனால. வேற ஒன்னும் காரணம் இல்ல. ஆனால் ஒருத்தர் மட்டும் ஜெயிலுக்கு போக மாட்டார் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்.

இந்த மத சார்பற்ற வேஷம் எல்லாம் போடாம…  வெறும் இந்து கோயிலுக்கு மட்டும் போய் வருகின்ற என்னுடைய சகோதரி துர்கா தீர்க்க சுமங்கலியா இருக்கணும். அதனால துர்கா மட்டும் ஜெயிலுக்கு போக மாட்டாங்க. மீதி எல்லாம்… முதலமைச்சர் வீட்ல இருக்கிற அத்தனை பேரும் ஜெயிலுக்கு போவாங்க. ஏன்னா…!  உப்பு தின்னுருக்கான், தண்ணி குடிக்கணும் என தெரிவித்தார்.