இந்தியாவில் யாரும் வாழ முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், “மீண்டும் ஒருமுறை மோடி பிரதமராக வந்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும். இந்தியாவில் யாரும் வாழ முடியாது. வேளாண்மையை அழிப்பதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்.

வேளாண்மை பற்றிய அறிவை அனைவரும் வளர்க்க வேண்டும் என முதல்வரே சொல்கிறார். கட்டடங்கள் கட்டப்பட்ட இடத்தை திரும்ப எப்படி விளை நிலங்களாக மாற்ற முடியும்? அண்ணாமலை நியாயமானவராக இருந்தால் அதிமுகவின் ஊழல் குறித்தும் பேச வேண்டும்” என தெரிவித்துள்ளார்.