தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தற்போது ஒரு பேட்டியில் கமல்ஹாசனுக்கும் தனக்கும் நடந்த மோதல் பற்றி கூறியுள்ளார். அதாவது இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் வசந்தபாலன். ஆல்பம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான வசந்தபாலன் வெயில், அங்காடித்தெரு மற்றும் அரவான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தியன் படப்பிடிப்பு தளத்தில் சங்கருக்கு உதவி இயக்குனராக வசந்தபாலன் பணிபுரிந்த போது ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரி நடிகர் கமலை கட்டிப்போட்டிருப்பார்.

அப்போது கமல் அருகில் இருக்கும் கேசை பற்ற வைத்து தன் கைகட்டை அவிழ்க்க வேண்டும். இதை படமாக்கும் போது நிறைய டேக் போய்க் கொண்டிருந்தது. ஏனெனில் கமல் கையில் விலங்கை மாட்டிக்கொண்டு மிகவும் பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தார். இதனால் சங்கர் என்னிடம் அந்த காட்சியை செய்து காட்டுமாறு கூறினார். அதன்படி நான் கையில் விலங்கை கட்டிக்கொண்டு ஒரே ஜம்பில் பாய்ந்து காட்டி நடித்தேன்.

இதைப் பார்த்து கமல் என்னை கண்டபடி திட்டினார். ஒரு வயதான நபரால் எப்படி ஒரே ஜம்பில் தாண்ட முடியும் என்றார். அவர் என்னை கண்டபடி திட்டியதால் நான் அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டேன். அப்போது சங்கர் என்னை சமாதானப்படுத்தினார். இந்த மோதலுக்கு பிறகு நான் கமலின் கண்களில் படாமல் இருந்தேன் என வசந்தபாலன் கூறியுள்ளார். மேலும் தற்போது வசந்தபாலன் இந்தியன் 2 படத்தில் கமலுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.