தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் குணசேகரன் இயக்கத்தில் நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 14-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடிகை சமந்தா தற்போது ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகை சமந்தாவிடம் கடந்த கால அனுபவங்களில் எதையாவது மறக்க விரும்புகிறீர்களா என தொகுப்பாளர் கேள்வி கேட்டார்.

அதற்கு நடிகை சமந்தா பழைய ரிலேஷன்ஷிப் பற்றி கேள்வி கேட்கிறீர்களா என்று கேட்டார். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என தொகுப்பாளர் கூறினார். அதற்கு நடிகை சமந்தா நீங்கள் என்னை வம்பில் சிக்க வைக்க பார்க்கிறீர்கள். நான் எதையும் மறக்க விரும்பவில்லை. ஏனென்றால் என் வாழ்க்கையில் நடந்த அனைத்துமே எனக்கு ஏதாவது ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறது என்று கூறினார். மேலும் நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவுடன் வாழ்ந்தது பற்றி தான் இப்படி கூறியிருக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.