குணசேகர் டைரக்டில் சமந்தா நடித்த “சாகுந்தலம்” திரைப்படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை ரூபாய்.60 கோடி பட்ஜெட்டில் எடுத்திருந்தனர். எனினும் இதுவரையிலும் ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சோஷியல் மீடியா பக்கத்தில் சமந்தாவுக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பியது. இந்நிலையில் தயாரிப்பாளரான சிட்டி பாபு “சாகுந்தலம் திரைப்படத்தோடு சமந்தாவின் திரைவாழ்க்கை முடிந்துவிட்டது. கதாநாயகிக்கான அந்தஸ்தை இழந்துவிட்டார்.

சாகுந்தலை கதாபாத்திரத்திற்கு பொருத்தம் இல்லாத அவரை எப்படி தேர்வு செய்தார்கள். படத்தை ஓட வைக்க சமந்தா தன் உடல்நிலையை காரணம் காட்டி மலிவான விளம்பரங்கள் செய்தார்” என கடுமையாக விமர்சித்திருந்தார். தற்போது சமூகவலைத்தளத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், “காது மடலில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என கூகுளில் தேடினேன். அதற்கு அதிகமான ஹார்மோன் சுரப்பது தான் காரணம் என வந்தது. இது யார் என்பது உங்களுக்கு தெரியும்” என குறிப்பிட்டு சிட்டிபாபுவை விமர்சித்து உள்ளார்.