பெங்களூரில் அலுவலகத்திற்கு வெளியே காதலியை, காதலன் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும், திவாகரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதன்பின் திருமணத்திற்கு பெண் வீட்டில் சம்மதிக்காததால் அப்பெண் வேறொருவரை திருமணம் செய்ய தயாரானார். இதனால் ஆத்திரமடைந்த திவாகர் காதலியை 16 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.