இப்போது பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என சொல்லி செல்கின்றனர்.

இந்நிலையில்  வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலை தடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என பெயர் எடுத்தோம். இன்று எங்கே போனது அந்த சகோதரத்துவம்?. தமிழ்நாட்டில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது மனிதநேயமற்ற செயல். தமிழர்கள் விரும்பாத வேலையைத் தானே அவர்கள் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளது.