உயர்நீதிமன்றங்கள் மற்றும் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். அதன்படி கடந்த 25 வருடங்களாக உச்ச நீதிமன்றத்தில் 81 வழக்குகளும், உயர் நீதிமன்றங்களில் 1.2 லட்சம் வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கீழமை நீதிமன்றங்களில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக 2,76,208 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.