குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை 13 மாநிலங்களுக்கு புதிய குடியரசு தலைவர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மகாராஷ்டிரா, ஆந்திரா, மணிப்பூர், நாகலாந்து, சத்தீஸ்கர், இமாச்சல் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஜார்கண்ட், அசாம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக கட்சியின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு முதல்வர் ஸ்டாலின் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் படி தன்னுடைய கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்திட விளைகிறேன் என முதல்வர் ஸ்டாலின் சிபி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.