திருநெல்வேலி மற்றும் கோவை மாநகராட்சி திமுக மேயர்கள் தங்கள் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். இந்த பதவிகள் காலியாக உள்ள நிலையில் அதற்கான மறைமுக தேர்தலை நடத்த தற்போது தேர்தல் ஆணையம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் அதன்படி கோவையில் மாநகராட்சி மேயர் தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதியும், திருநெல்வேலியில் மாநகராட்சி மேயர் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதியும் நடைபெற இருக்கிறது.
