ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைகளுக்கு பிறகு தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வருகிற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் நுழைவாயிலான ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்தியது.
நெரிசலைக் குறைக்கும் வகையில், சுங்கச்சாவடியில் கட்டணமின்றி வாகனங்களை செல்ல அனுமதிக்கப்பட்டது. இந்த தீர்மானம் போக்குவரத்தை சீராகவும் விரைவாகவும் இயக்க உதவியாக அமைந்துள்ளது.
