மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான JEE நுழைவுத் தேர்வுக்கு கடந்த மாதம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்த நிலையில் JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு 10.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்வு அடுத்த மாதம் ஆறாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 15 ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.