
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு மக்கள் மனநிலை மாறிட்டு இருக்கு. நம்ம இரண்டு கட்சிக்கு நிறைய வாய்ப்பு கொடுத்துட்டாங்க . இப்போ இங்கே கட்சி, அரசியல் பத்தி பேசுறது இது ஒரு மேடை பேசி தான் ஆகணும். ஏனென்றால், மக்கள் புரியிற நிலையில் இல்லை, பேசி தான் ஆகணும். மக்களுடைய மனநிலை இரண்டு பேருக்கும் வாய்ப்பு கொடுத்துட்டோம். ஆனால் அது நமக்கு செய்தது என்ன ? கேள்வி கேட்டுட்டு இருக்காங்க.
அதனால இதையெல்லாம் இந்த நேரத்தில் நான் சொல்லியாக வேண்டும் நிச்சயமாக நாம் எல்லாம் ஒன்று சேருகின்ற காலம். நாம் ஒன்று என்று சொன்னால்…. நாம் சொல்வதெல்லாம் பாட்டாளிகள்…. நெற்றியில் யாருக்கு வேர்வை வருதோ, அவன் பாட்டாளி. இந்த ஜாதி…. இந்த மதம் எல்லாம் இல்லை…. நாம் பாட்டாளிகள்…. நாம் சேரனும்… நம்முடைய உரிமைகள் நம்ம தான் செய்ய முடியும். எல்லாத்துக்கும் வாய்ப்பு குடுத்தாச்சு.
55 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தாச்சு. ஆனாலும் இன்னும் நாம் முன்னேறாமல் இருக்கின்ற ஒரு சூழல் இருக்கிறது. நம்முடைய தேவேந்திரகுல சமுதாயத்தை சார்ந்த உறவுகள்… எனக்கு முன்பு பேசினார்கள்… அதிக அங்கீகாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் தான் கிடைக்கிறது. 1989 இல் கட்சி தொடங்கியவுடன் அன்றுக்கு இளைஞர் சங்கத்தின் தலைவர் …
பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் இளைஞர் சங்கத்தின் தலைவர் ஜான் பாண்டியன் அவர்கள்…. கட்சி தொடங்கி 5 மாதத்தில் ஜான் பாண்டியன் அவர்களை பெரம்பலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வைத்தோம். 83 ஆயிரம் வாக்குகளை பெற்றார். தனியாக போட்டியிட்டு… பிறகு அடுத்த 1991 சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் முதுகுளத்தூர் தொகுதி 29 ஆயிரம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தி வந்தார். திமுகவின் 3ஆவது இடம். அடுத்தது நம்முடைய பசுபதி பாண்டியன் அவர்கள்…. கட்சியினுடைய பொருளாளராக ஐயா அவர்கள் பொறுப்பு கொடுத்தார்.
அதன் பிறகு கட்சியினுடைய பொதுச் செயலாளராக மூக்கையா அவர்கள் இருந்தார. இன்றைக்கு நம்முடைய மரியாதைக்குரிய திரு வடிவேல் ராவணன் அவர்கள் 2010 இல் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினுடைய பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கின்றார். முருகவேல் ராஜன் அவர்களை வந்தவாசி தொகுதிக்கு அழைத்துச் சென்று…. அவருக்கு முழு அரசியல் தேர்தலினுடைய செலவை எல்லாம் ஏற்றுக்கொண்டு, அவரை சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியவர் மருத்துவர் ஐயா அவர்கள் என தெரிவித்தார்.