நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திற்கான கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திற்கான டீசர்,பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக பெரிய அளவிலான வெற்றியை பெறாததால் இயக்குனர் நெல்சன் இப்படத்திற்கு அதிக அளவு உழைப்பை செலுத்தியுள்ளதாகவும், வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படமாக இது இருக்குமென அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை யூகித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் பதிவுகள் தற்போது வைரலாகி வருகின்றனர். அதன்படி, ஜெயிலர்  திரைப்படமானது, ஜெயிலில் அடைபட்டு இருக்கும் முக்கியமான வில்லன் அல்லது தீவிரவாதியை காப்பாற்றுவதற்காக அவரது குழுவை சேர்ந்த ஆட்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்வதும், அவர்களது முயற்சிகளை தைரியம் மற்றும் தந்திரம் மிக்க தனது திட்டங்களால் கதாநாயகன் ரஜினிகாந்த் எப்படி முறியடிக்கிறார் என்பதே கதையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.