காசாவில் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக தாக்குதல் தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காசாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் உடைய டங்குகள் தாக்குதலை நடத்த தொடங்கி இருப்பதாக அங்கிருந்து வரக்கூடிய செய்திகள் தெரிவிக்கின்றன.  இஸ்ரேல் ராணுவம் தங்களுடைய பதில் தாக்குதலை தொடங்கி இருப்பதாக தெரிய வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருந்தார்கள்.

ஏறக்குறைய 5,000 ராக்கெட்டை கொண்டு அவர்கள் திடீரென்று அதிகாலை நேரத்தில் தாக்குதலை தொடங்கி இருந்தார்கள். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அந்த தாக்குதல் நடத்தப்பட்டதில் நூற்றுக்கணக்கானவர்கள் இஸ்ரேல் தரப்பில் உயிரிழந்திருந்தார்கள். அதற்கு பதிலடியாக இஸ்ரேலிலும் தங்களுடைய பதில் தாக்குதலை தொடங்கி இருந்தார்கள்.

இஸ்ரேல் ராணுவமும் – ஹமாஸ் அமைப்பினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரக்கூடிய நிலையில் சில பிணைய கைதிகளும் பிடித்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். தொடர்ந்து அவர்களை மீட்கக்கூடிய பணிகளும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் காஜாவை முழுமையாக கைப்பற்றக்கூடிய முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் காசாவுக்குள் தரை வழியாக நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. முதல் முறையாக தரை வழியாக காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவி இருக்கின்றது. இதற்கு முன்பு வான்வழி தாக்குதல் மட்டும்  நடைபெற்று வந்தது.   வான்வழிவாயிலாக நடைபெற்ற வந்த தாக்குதலை தொடர்ந்து முதல்முறையாக தற்போது தரை வழியாகவும் காசா நகரில் தாக்குத இஸ்ரேல் ராணுவம் தொடங்கி, இஸ்ரேல் டாங்கிகளை காசா உள்ளே கொண்டு சென்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.