தமிழ் திரையுலகில் பல்வேறு வித்தியாசமான காதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அண்மையில் இவர் நடிப்பில் ரன் பேபி ரன், கிரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகியது. இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் தீயவர் கொலைகள் நடுங்க, மோகன்தாஸ், துருவ நட்சத்திரம் உட்பட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இவரது சோஷியல் மீடியா பக்கங்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோவ் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷின் Twitter பக்கத்தை மர்மநபர்கள் ஹேக் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷின் டுவிட்டர் கணக்கை மீட்டெடுப்பதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதுவரை ஹேக் செய்யப்பட்ட டுவிட்டர் கணக்கிலிருந்து வரும் செய்திகளை யாரும் நம்பவேண்டாம் என ரசிகர்களிடம் கூறியுள்ளனர்.