உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் கிராத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் நடந்த ஒரு மரியாதையற்ற சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் பெரும் வெடிகுண்டாக பரவி வருகிறது. குப்பைகள் ஏற்றி சென்ற ஆட்டோவின் கீழ் சிக்கி காயமடைந்த துப்புரவுத் தொழிலாளிக்கு, முதலில் மருத்துவமனை ஊழியர்கள் எக்ஸ்ரே எடுக்க மறுத்துவிட்டனர்.

பின்னர், எக்ஸ்ரே எடுக்கும்போது மேசையில் படுக்க வைக்காமல் தரையில் படுக்க வைத்து எடுத்த சம்பவம் பலரையும் உள்வாங்க வைத்துள்ளது. இந்த அவலமான செயலை சக ஊழியர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்ததையடுத்து, இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து எக்ஸ்ரே தொழில்நுட்ப வல்லுநர் கூறியதாவது, “அவரது உடையிலிருந்து வந்த துர்நாற்றம் காரணமாக மற்ற நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் தரையில் எக்ஸ்ரே எடுத்தோம்” என கூறினார்.

இதற்குத் தகுந்த பதிலளித்த பாஜக தலைவர் சுபாஷ் வால்மீகி, இது தீண்டாமை மற்றும் அடிப்படையான மனித மரியாதைக்கு எதிரான செயல் என கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிலையில், பிஜ்னோர் மாவட்ட நிர்வாக அதிகாரி ஜஸ்ஜித் கவுர், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி (CMO) கௌஷலேந்திர சிங்குக்கு விசாரணை உத்தரவு வழங்கியுள்ளார்.

மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் கடிதம் அனுப்பி, நோயாளிகளுக்கு மரியாதை மற்றும் உணர்திறனுடன் சிகிச்சை வழங்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளார். இந்த சம்பவம் அரசு மருத்துவமனைகளில் உள்ள மனித நேயமற்ற செயல்கள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.