ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் தேர்வு செய்த நிலையில் துவக்க வீரர்களாக கேப்டன் ஷாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களமிறங்கினர். இவர்கள் முறையே 20 முதல் 25 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய ரோசோ, ஜிதேஷ் ஷர்மா, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர்கள் முறையே 9, 12, 6 ரனகளில் ஆட்டமிழந்தனர். இதனால் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்களை குவித்தனர். குஜராத் அணியில் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா மற்றும் நூர் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ரக்ஷித்கான் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து குஜராத் அணியில் சுப்மன் கில் மற்றும் சகா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இதில் சகா 13 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்ததாக சுதர்சன் களமிறங்கினார். சுதர்சன் மற்றும் கில் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் கில் 35 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்ததாக வந்த மில்லர் 4 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில் சுதர்சன் 31 ரன்களில் வெளியேறிய நிலையில், அடுத்ததாக களம் இறங்கிய ஷாருக்கான்-தெவாட்டியா ஜோடி  அதிரடியான  ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இந்த அணி இறுதியில் 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை குவித்த்து. இதன் மூலம் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.