பேட்ஸ்மேன் உடைய ஆட்டத்தை அமர்ந்து சுப்மன்  கில் பார்த்துக் கொண்டிருந்த பொழுது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒரு வெளிநாட்டு ரசிகையை மீண்டும் மீண்டும் கேமரா மேன் காட்டினார் . அப்பொழுது சுப்மன் கில் திரையை பார்த்து வாயைப் பிளந்து சிரிப்பது போன்ற காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டது.  இந்த வீடியோவை மட்டும் எடுத்து ஒரு சிலர் இணையத்தில் வைரலாக்கி வந்தனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவில் பலரும் பல கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அதில் ஒரு சிலர் ஜிடி அணி படுமோசமாக விக்கெட்டுகள் இழந்த நிலையில் போட்டியை பார்ப்பதை விட அந்த ரசியை பார்க்கலாம் என்று  சுப்மன்  கில் முடிவு செய்துவிட்டார் போல என்றும், ஒரு சிலர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவை சுப்மன்  கில் காதலித்து வருவதாக சொல்லப்படும் நிலையில் இந்த காட்சியை சாரா பார்த்துவிட்டால் இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிடும் என்றும் கேலி செய்து வருகிறார்கள். பொதுவாக ஐபிஎல் தொடரில் போட்டி நடுவே ரசிகர்களின் ரியாக்ஷனை காண்பிப்பது வழக்கம். அப்படியாக ஒரு சில போட்டிகளில் வேகமாக விக்கெட்டுகள் சரிந்து சுவாரசியமின்றி இருக்கும் பொழுது இது போன்ற அழகான ரசிகைகளை திரையில் காட்டி ஒருவித பரபரப்பு ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது.